அசைவம்

Kanthari Chicken Curry Recipe In Tamil | காந்தாரி சிக்கன் குழம்பு

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான காந்தாரி சிக்கன் குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

இந்த வார விடுமுறையில் சிக்கன் எடுக்க திட்டமிட்டுள்ளீர்களா? இந்த வாரம் வித்தியாசமான ரெசிபியை முயற்சிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்பெஷல் காந்தாரி சிக்கன் குழம்பு செய்யுங்கள். இந்த சிக்கன் குழம்பு சப்பாத்தி, சாதம், இடியாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு இந்த சிக்கன் குழம்பில் மிகவும் காரமான காந்தாரி மிளகாய் சேர்க்கப்படுவதால், இந்த குழம்பு சற்று காரமாக இருக்கும். கார உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு, இந்த குழம்பு சரியான தேர்வாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 1/2 கிலோ

* தேங்காய் எண்ணெய் – 2-3 டேபிள் ஸ்பூன்

* சின்ன வெங்காயம் – 3/4 கப் (நறுக்கியது)

* கறிவேப்பிலை – சிறிது

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

* காந்தாரி மிளகாய் – 10 (தட்டிக் கொள்ளவும்)

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 1/2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* தக்காளி – 1 (நறுக்கியது)

* சுடுநீர் – 1/2 கப்

* முந்திரி – 6-8 (நீரில் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்)

* கெட்டியான தேங்காய் பால் – 1/4 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, 3-4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* பின் அதில் சின்ன வெங்காயம், 2-3 காந்தாரி மிளகாய், சிறிது உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், நசுக்கிய காந்தாரி மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, பின் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் சேர்த்து 1-2 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

* பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து 4-5 நிமிடம் நன்கு பிரட்டி, சுடுநீரை ஊற்றி கிளறி, சிக்கனை குறைவான தீயில் 25-30 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* சிக்கன் நன்கு வெந்தது, கரம் மசாலா, முந்திரி பேஸ்ட் சேர்த்து கிளறி, சில நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

* அடுத்து கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி, மேலே சிறிது கறிவேப்பிலையைத் தூவி கிளறி, சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து, குறைவான தீயில் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான காந்தாரி சிக்கன் குழம்பு தயார்.

Image Courtesy: yummyoyummy

இந்த பதிவின் மூலமாக காந்தாரி சிக்கன் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி காந்தாரி சிக்கன் குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment