தஞ்சை வட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான (Medical Insurance Plan) புகைப்படம் எடுக்கும் பணி 4ம் தேதி தொடங்குகிறது.தஞ்சை கலெக்டர் சுப்பையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மருத்துவ காப்பீட்டு திட்டம்
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் தஞ்சை வட்டத்தை சேர்ந்த வல்லம், கள்ளப்பெரம்பூர், நாஞ்சிக்கோட்டை மற்றும் ராமாபுரம் ஆகிய சரகங்களில் இன்று (4ம் தேதி) முதல் வரும் 10ம் தேதி வரை யும், பட்டுக்கோட்டை வட்டத்தில் துவரங்குறிச்சி, ஆண்டிக்காடு, குறிச்சி, தம்பிக்கோட்டை, நம்பிவயல், அதிராம்பட்டிணம், பெரியக்கோட்டை, மதுக்கூர், திருச்சிற்றம்பலம், பட்டுக்கோட்டை ஆகிய சரகங்களில் இன்று முதல் வரும் 16ம் தேதி வரையும் மருத் துவ காப்பீட்டு அட்டை கிடைக்க பெறாதவர்களுக்கு புகைப்படம் எடுக்கும்பணி அந்தந்த கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது. மேற்கண்ட வட்டங்களில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வந்து புகைப்படம் எடுத்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புகைப்படம் எடுக்க வரும் பயனாளிகள் குடும்ப அட்டை நகல் மற்றும் ரூ.72 ஆயிரத்துக்குள் வருமானம் உள்ள பயனாளிகள் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சான்று பெற்று வர வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சுப்பையன் கேட்டுக்கொண்டுள்ளார்.