நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தோசை குருமா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இன்று உங்கள் வீட்டில் தோசை செய்யப் போகிறீர்களா? தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார் செய்து அலுத்துவிட்டதா? அப்படியானால் இன்று தோசைக்கு குருமா செய்யுங்கள். இந்த தோசை குருமா செய்வது மிகவும் ஈஸி. இந்த தோசை குருமா தோசைக்கு மட்டுமின்றி, இட்லி, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு…
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி – 1 இன்ச்
* பூண்டு – 2 பல்
* பெரிய வெங்காயம் – 1/2 (நறுக்கியது)
* தக்காளி – 1 (நறுக்கியது)
* தேங்காய் – 1/2 மூடி (துருவியது)
* வரமிளகாய் – 3
* மல்லி – 1 டீஸ்பூன்
* கசகசா – 1 டீஸ்பூன்
* சோம்பு – 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் – 1/2 கப்
குருமாவிற்கு…
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை – 1/2 இன்ச்
* ஏலக்காய் – 3
* கறிவேப்பிலை – சிறிது
* பெரிய வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் – 1 (நீளமாக கீறியது)
* தக்காளி – 1/2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – 3 கப்
* கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, அதைத் தொடர்ந்து துருவிய தேங்காய், 3 வரமிளகாய், மல்லி விதைகள், கசகசா, சோம்பு மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு 1/2 கப் நீரை ஊற்றி நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, மஞ்ச தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 3 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு, மேலே கொத்தமல்லியை தூவி கிளறினால், தோசை குருமா தயார்.
Image Courtesy: hebbarskitchen
இந்த பதிவின் மூலமாக தோசை குருமா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தோசை குருமா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…