நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான காளான் பெப்பர் ப்ரை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அடிக்கடி உங்கள் வீட்டில் காளானை வாங்கி செய்வீர்களா? ஆனால் ஒரே மாதிரி காளானை சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்த முறை 20 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் காரசாரமான காளான் பெப்பர் ப்ரை செய்யுங்கள். இது சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு..
* மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* சோம்பு – 1/2 டீஸ்பூன்
காளான் ரோஸ்ட்டிற்கு…
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1/4 டீஸ்பூன்
* இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் – 3
* காளான் – 250 கிராம்
* குடைமிளகாய் – 1
* தண்ணீர் – 1/4 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு…
* நெய் – 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 2
* வரமிளகாய் – 2
* கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம் மற்றும் சோம்பு ஆகியவற்றை போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் காளானை சேர்த்து நன்கு கிளறி, குடைமிளகாயை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்த பொடி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் 10 நிமிடம் ரோஸ்ட் செய்ய வேண்டும்.
* இறுதியாக மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் நெய் சேர்த்து உருகியதும், கடுகு, பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து காளானில் ஊற்றி கிளறி இறக்கினால், காளான் பெப்பர் ப்ரை தயார்.
Image Courtesy: steffisrecipes
இந்த பதிவின் மூலமாக காளான் பெப்பர் ப்ரை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி காளான் பெப்பர் ப்ரை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…