சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் மீண்டும் இணைகிறார் புரட்சி இயக்குநர் பா. ரஞ்சித் ( Pa Ranjith). இதையடுத்து அந்த நல்ல செய்தியைச் சொன்ன நடிகர் தனுஷின் டிவிட்டுக்கு ரீட்வீட் செய்து மகிழ்ச்சி என்று தனது டிரேட் மார்க் புன்னகையை பதிவு செய்துள்ளார் ரஞ்சித்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கபாலி’. தாணு தயாரிப்பில் வெளியான இப்படம் இந்தியளவில் பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களின் சாதனையை வசூலில் முறியடித்தது.
ரஜினிகாந்த் என்ற நல்ல நடிகரை நாட்டு மக்களுக்கு மீண்டும் அடையாளம் காட்டிய பெருமைக்குரியவர் பா. ரஞ்சித். ரஜினியை வைத்து வித்தியாசமே இல்லாமல் இயக்கி வந்த இயக்குநர்களுக்கு மத்தியில், கபாலி மூலம் புதிய கோணத்தில் ரஜினியைக் காட்டிய சாதனையாளர். கபாலி பெரும் வரலாறு படைத்தது. தமிழ் சினிமாவின் புதிய சகாப்தமாக மாறி நிற்கிறது.
இந்த நிலையில் பா. ரஞ்சித்துடன் கை கோர்க்கிறார். மிகக் குறுகிய காலத்தில் ஒரு இயக்குநருடன் ரஜினி அவ்வளவு சீக்கிரம் இணைய மாட்டார். இந்த நிலையில் இளைய இயக்குநரான ரஞ்சித்துடன் தனது முதல் படத்தை முடித்த கையோடு அடுத்த படத்திலும் அவர் கை கோர்க்கவுள்ளது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது. அதேசமயம், கபாலி என்ற வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்த ரஞ்சித், இந்த முறை ரஜினியை வைத்து என்ன மாஜிக் செய்யப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பும், ஆர்வமும் அதிகரித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ உருவாகி வருகிறது. இப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் ரஞ்சித். இப்படத்தை தனுஷ் தயாரிக்க இருக்கிறார். இப்படம் ‘கபாலி 2’ ஆக இருக்கும் என தெரிவிக்கிறார்கள். ஆனால் தனுஷ் மற்றும் ரஞ்சித் இதனை உறுதிப்படுத்தவில்லை.
ஒன்று மட்டும் உறுதி.. நிச்சயம் இந்தப் படம் வரலாறு படைக்கும்..!
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…