நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான திணை கருப்பட்டி பொங்கல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பொங்கல் பண்டிகை வரப்போகிறது. வழக்கமாக பச்சரிசியைக் கொண்டு தான் பொங்கல் செய்வோம். ஆனால் நீங்கள் சிறு தானியங்களைக் கொண்டு பொங்கல் செய்ய நினைத்தால் திணை கருப்பட்டி பொங்கல் செய்யுங்கள். இந்த பொங்கல் டயட்டில் இருப்போருக்கு ஏற்றதாக இருக்கும். மேலும் இது ஒரு வித்தியாசமான சுவையையும் கொண்டிருக்கும். நீங்கள் வித்தியாசமான பொங்கலை வீட்டில் செய்ய நினைத்துக் கொண்டிருந்தால், திணை கருப்பட்டி பொங்கலை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
* நெய் – 2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
* திணை – 1/2 கப்
* தண்ணீர் – 2 கப்
* கருப்பட்டி – 1 கப்
* தண்ணீர் – 1/2 கப்
* முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
* உலர் திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
* சுக்கு பொடி – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பாசிப்பருப்பை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்க வேண்டும்.
* பின் அதில் திணையை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்பு 2 கப் தண்ணீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* அதே வேளையில் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் கருப்பட்டியை போட்டு, அரை கப் நீர் ஊற்றி, கருப்பட்டி முற்றிலும் கரைந்ததும் இறக்க வேண்டும்.
* பிறகு வெந்து கொண்டிருக்கும் திணையில், கருப்பட்டி நீரை வடிகட்டி ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி, ஏலக்காய் பொடி மற்றும் சுக்கு பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.
* இறுதியில் ஒரு சிறு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி அடுப்பில் வைத்து, முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தயாரித்து திணை பொங்கலுடன் சேர்த்து கிளறினால், திணை கருப்பட்டி பொங்கல் தயார்.
இந்த பதிவின் மூலமாக திணை கருப்பட்டி பொங்கல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி திணை கருப்பட்டி பொங்கல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…