நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தக்காளி வேர்க்கடலை சட்னி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் இட்லி, தோசை சாப்பிடும் பழக்கம் இருக்கும். உங்கள் வீட்டில் இன்று இட்லி அல்லது தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சட்னி செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் தக்காளி வேர்க்கடலை சட்னி செய்யுங்கள். இது வித்தியாசமான சுவையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
கீழே தக்காளி வேர்க்கடலை சட்னி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை – 1/4 கப்
* வரமிளகாய் – 3
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு – 2
* சின்ன வெங்காயம் – 5
* தக்காளி – 2
* புளி – சிறு துண்டு
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை மற்றும் வரமிளகாயைப் போட்டு குறைவான தீயில் நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை தனியாக ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, சின்ன வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.
* பிறகு அதில் தக்காளியை போட்டு நன்கு மென்மையாகும் வரை 3-5 நிமிடம் வதக்கவும்.
* இப்போது அதில் புளி, வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் வரமிளகாயை சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* வதக்கிய பொருட்கள் குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியில், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இறக்கி, சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான தக்காளி வேர்க்கடலை சட்னி தயார்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக தக்காளி வேர்க்கடலை சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தக்காளி வேர்க்கடலை சட்னி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…