Categories: சைவம்

Chettinad Mushroom Masala Recipe In Tamil | செட்டிநாடு காளான் மசாலா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான செட்டிநாடு காளான் மசாலா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதுவும் செட்டிநாடு ரெசிபிக்களை விரும்புவார்களா? அப்படியானால் இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்வதாக இருந்தால், செட்டிநாடு காளான் மசாலாவை செய்து சாப்பிடுங்கள். இந்த காளான் மசாலா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த காளான் மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* காளான் – 2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

* புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன் (அல்லது) தக்காளி – 1

* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

* கடுகு – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

மசாலா பொடிக்கு…

* மிளகு – 1 டீஸ்பூன்

* வரமிளகாய் – 2

* மல்லி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* சின்ன வெங்காயம் – 2-3

* பூண்டு – 2 பல்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ‘மசாலா பொடிக்கு’ கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் காளானை நன்கு சுத்தம் செய்து, நீளவாக்கி வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு அதில் காளானை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். நீரை சேர்க்காதீர்கள். ஏனெனில் காளானில் இருந்தே அது வேக தேவையான நீர் வெளியேறும்.

* அடுத்து, அதில் தக்காளி/புளிச்சாறு சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து சில நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, சில நிமிடங்கள் கொதிக்க விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், செட்டிநாடு காளான் மசாலா தயார்.

Image Courtesy: cookspan

இந்த பதிவின் மூலமாக செட்டிநாடு காளான் மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி செட்டிநாடு காளான் மசாலா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

1 year ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago