Categories: சைவம்

Custard Apple Milkshake Recipe In Tamil | சீத்தாப்பழம் மில்க் ஷேக்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சீத்தாப்பழம் மில்க் ஷேக் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை தினமும் செய்து கொடுப்பீர்களா? இன்று அவர்களுக்கு மில்க் ஷேக் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? தற்போது சீத்தாப்பழம் சீசன் என்பதால், கடைகளில் இப்பழத்தை அதிகம் காண நேரிடும். அந்த சீத்தாப்பழத்தைக் கொண்டு மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.

இந்த மில்க் ஷேக் செய்வது மிகவும் சுலபம்.

தேவையான பொருட்கள்:

* சீத்தாப்பழம் – 1-2 (நன்கு கனிந்தது)

* சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

* குளிர்ந்த பால் – 1 கப்

செய்முறை:

* முதலில் சீத்தாப்பழத்தின் உள்ளே இருக்கும் தசைப்பகுதியை கரண்டியால் எடுத்து, மிக்சர் ஜார்/பிளெண்டரில் போட்டு, 1/4 கப் பால் ஊற்றி, சில நிமிடங்கள் நன்கு அரைத்து, அதில் உள்ள விதைகளை எடுத்துவிட வேண்டும்.

* பின்னர் அதில் சர்க்கரை மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* இப்போது அரைத்ததை ஒரு டம்ளரில் ஊற்றினால், சுவையான சீத்தாப்பழம் மில்க் ஷேக் தயார்.

இந்த பதிவின் மூலமாக சீத்தாப்பழம் மில்க் ஷேக் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சீத்தாப்பழம் மில்க் ஷேக் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

1 year ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago