அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வில் (Engineering Counselling ) பங்கேற்கும் மாணவர்கள் உரிய நேரத்தில் பங்கேற்பதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து காலை 5 மணி முதல் 10 நிமிட இடைவெளியில் கோயம்பேடு – திருவான்மியூர் வழித்தடத்தில் (எண்.170) வடபழனி, அசோக்பில்லர், சைதாப்பேட்டை, அண்ணாபல்கலைக்கழகம் வழியாக 10 சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயங்கி வருகின்றன.
பெருங்களத்தூரிலிருந்து காலை 5 மணியிலிருந்து 21 ஜி (பெருங்களத்தூர்- பிராட்வே) வழித்தடத்தில் தாம்பரம், பல்லாவரம், கிண்டி, சைதாப்பேட்டை, அண்ணாபல்கலைக்கழகம் வழியாக 10 சிறப்புப் பேருந்துகள் இயங்கி வருகின்றன. தவிர ஏற்கனவே தாம்பரம், கிண்டி, வடபழனி, சென்ட்ரல், எழும்பூர், பிராட்வே, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, அயனாவரம், தி.நகர், திருவான்மியூர் போன்ற பகுதிகளில் இருந்து 300 மாநகர பேருந்துகள் அண்ணா பல்கலைக்கழகம் வழியாக இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…