அழகு குறிப்பு

இளமையாக இருக்கணுமா? அப்ப இத படிங்க | Live young forever

Live young forever: பெண்கள் எப்போதும் இளமையாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்கள் எப்போதும் இளமையாக இருக்க முடியும்.

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சையில் வைட்டமின் ‘சி’ நிறைந்திருக்கிறது. எனவே இந்தப் பழங்களைச் சாப்பிட்டால் இவற்றில் உள்ள வைட்டமின் ‘சி’ உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தைப் புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

தக்காளியில், சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் முதுமைக் கோடுகளையும் தடுக்கும் லைகோபீன் அதிகமாக இருக்கிறது. எனவே இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்துக்கு ‘மாஸ்க்’ போல தடவிப் பயன்படுத்தலாம்.

நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் நன்கு பொலிவு பெறும். அதிலும் குறிப்பாக, வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபீன், லுட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த பழங்களையும் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம்.

வெயில் பயணத்தை தவிர்க்கவும்:

ஆமாங்க, காலைல 10 மணில இருந்து மாலை 4 மணி வரை சூரிய வெப்பம் ரொம்பவே அதிகம். தவிர்க்க முடியாத பயணத்தின் பொது குடை அல்லது தொப்பியை எடுத்து செல்லலாம்.

மோசமான உணவு கட்டுப்பாடு வேண்டாம்:

ஆரோக்கியமற்ற உணவு கட்டுப்பாடு உங்களுக்கு வயதான தோற்றத்தை கொடுக்கும். பால் மற்றும் மீன் உங்களது எலும்புகளை பராமரிக்க மிக முக்கியம்.

புகைத்தல் முதிர்ந்த தோற்றம் தரும்:

புகைப்பிடிக்கிறதுனால உங்க இரத்த ஓட்டம் வெகுவா குறைஞ்சும் போகுதுங்க.

சிரித்து கொண்டே இருங்க:

இளமையாக இருக்க நீங்க தினமும் சிரிச்சே ஆகணும். புன்னகைத்தால் இளமையாக மட்டும் இல்ல நீங்க அழகாவும் இருக்கீங்க.

admin

Share
Published by
admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

1 year ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago