Pattukottai police: பட்டுக்கோட்டை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணமாக இருக்கிறது. இதனால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டும் பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் அன்பழகன் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்தார். அதன்படி நகரின் முக்கிய வீதிகளில் 3 இடங்களில் பேருந்து நிறுத்தத்தை மாற்றினார்.
இந்த அதிரடி மாற்றங்களால் பட்டுக்கோட்டை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டையின் இதயப்பகுதியான மணிக்கூண்டு பகுதியில் புதிய காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. அந்த காவல் உதவி மையத்தை தஞ்சை சரக காவல்துறை டி.ஐ.ஜி. லோகநாதன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி (பொறுப்பு) சேகர், இன்ஸ்பெக்டர் அன்பழகன், பயிற்சி எஸ்.ஐ. ஜெகதீசன், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு எஸ்.எஸ்.ஐ. சேகர், எஸ்.பி. தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ. மேகநாதன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை காவல் துறை ஆய்வாளா் அன்பழகன் சில தினங்களுக்கு முன் ஹெல்மெட் அணிந்து வரும் வாகனஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கி வாகன ஓட்டிகளை உற்ச்சாகப்படுத்தி படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேகம் குறைப்போம்… உயிர் காப்போம்…
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…