நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான வரலட்சுமி விரத ஸ்பெஷல்: பன்னீர் பாயாசம் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
வரலட்சுமி விரதம் வரப்போகிறது. இந்த வருட வரலட்சுமி நோன்பின் போது உங்கள் வீட்டில் ஸ்பெஷல் பிரசாதம் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பன்னீர் பாயாசம் செய்யுங்கள். இதுவரை நீங்கள் பன்னீரைக் கொண்டு சைடு டிஷ்களைத் தான் செய்திருப்பீர்கள். ஆனால் பன்னீரைக் கொண்டு பாயாசம் செய்தால், அது வித்தியாசமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். அதோடு வீட்டிற்கு வரலட்சுமி நோன்பின் போது வருபவர்களிடம் பாராட்டையும் பெறலாம்.
தேவையான பொருட்கள்:
* பால் – 1 லிட்டர் / 4 கப்
* பன்னீர் – 200 கிராம்
* சர்க்கரை – 1/2 கப்
* குங்குமப்பூ – சிறிது
* ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
* நறுக்கிய பாதாம், பிஸ்தா – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பன்னீரைத் துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குறைவான தீயில் பால் பாதியாக குறையும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும்.
* இப்போது அதில் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து கிளறி நன்கு சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய பன்னீரை சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இப்போது பாயாசம் சற்று கெட்டியாகவும், க்ரீமியாகவும் மாறும்.
* அதன் பின் அதில் ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய பாதாம், பிஸ்தாவை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து இறக்கினால், பன்னீர் பாயாசம் தயார்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக வரலட்சுமி விரத ஸ்பெஷல்: பன்னீர் பாயாசம் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி வரலட்சுமி விரத ஸ்பெஷல்: பன்னீர் பாயாசம் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…