அசைவம்

Chicken Kuzhambu Recipe | நாகர்கோவில் ஸ்டைல் சிக்கன் குழம்பு

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான நாகர்கோவில் ஸ்டைல் சிக்கன் குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மழைக்காலத்தில் அனைவருக்குமே நல்ல காரசாரமாக சமைத்து சாப்பிட தோன்றும். அதிலும் பலருக்கு அசைவ உணவை தான் சாப்பிட பிடிக்கும்.
அதைப் படித்து செய்து சுவைத்து, எப்படி இருந்தது என்று உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக இந்த குழம்பானது சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தி, இட்லி, தோசைக்கும் அற்புதமாக இருக்கும். வாருங்கள் இப்போது நாகர்கோவில் சிக்கன் குழம்பின் எளிய செய்முறையைக் காண்போம்.

MOST READ: ருசியான… சிக்கன் கெட்டி குழம்பு

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 500 கிராம்

* எண்ணெய் – 1/4 கப்

* பட்டை – 1 துண்டு

* பிரியாணி இலை – 1

* ஏலக்காய் – 4

* வெங்காயம் – 2 (நறுக்கியது)

* கறிவேப்பிலை – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு பேட் – 2 டேபிள் ஸ்பூன்

* சிக்கன் மசாலா பவுடர் – 3-4 டேபிள் ஸ்பூன்

* தக்காளி – 4 (நறுக்கியது)

* துருவிய தேங்காய் – 1 கப்

* சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

* கொத்தமல்லி – அலங்கரிக்க

செய்முறை:

* முதலில் மிக்ஸர் ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, நன்கு பேஸ்ட் போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

* பின்பு அதில் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு, 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.

* பின் அதில் சிக்கன் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

* அடுத்து, அதில் சிக்கனைப் போட்டு மசாலா சிக்கனுடன் ஒன்றுசேரும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்பு அதில் நீரை ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், மூடி வைத்து குறைவான தீயில் 30-35 நிமிடம் வேக வைக்கவும்.

* பிறகு அதில் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 5-20 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.

* எண்ணெயானது நன்கு பிரிந்து மேலே மிதக்கும் போது, குழம்பின் மேல் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான நாகர்கோவில் ஸ்டைல் சிக்கன் குழம்பு தயார்.

IMAGE COURTESY

இந்த பதிவின் மூலமாக நாகர்கோவில் ஸ்டைல் சிக்கன் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி நாகர்கோவில் ஸ்டைல் சிக்கன் குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment