நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பன்னீர் பிரியாணி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பிரியாணி பலரது விருப்பமான உணவு. இந்த பிரியாணியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் சாப்பிடுவது சிக்கன், மட்டன் பிரியாணியாகவே இருக்கும். ஆனால் சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடக்கூடியதாக பன்னீர் பிரியாணி இருக்கும். இந்த பன்னீர் பிரியாணியை காய்கறிகளுடன் சேர்த்தும் செய்யலாம் அல்லது வெறும் பன்னீரைப் பயன்படுத்தியும் செய்யலாம். அதெல்லாம் ஒவ்வொருவரின் விருப்பத்தைப் பொறுத்தது.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி – 2 கப்
* பன்னீர் – 250 கிராம்
* வெங்காயம் – 2 (நறுக்கியது)
* தக்காளி – 5 (நறுக்கியது)
* இஞ்சி – 2 இன்ச்
* பூண்டு – 4 பற்கள்
* பச்சை மிளகாய் – 2
* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* கிராம்பு – 3
* பட்டை – 1 இன்ச்
* ஏலக்காய் – 2
* பிரியாணி இலை – 2
* மிளகு – 1 டீஸ்பூன்
* புதினா இலைகள் – சிறிது
* நெய் – 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில், கிராம்பு, ஏலக்காய், மிளகு மற்றும் பட்டை சேர்த்து நன்கு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், பிரியாணி இலை, மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்த மசாலா பொடியை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும். அதன்பின் புதினா இலைகளையும், கழுவி வைத்துள்ள பாசுமதி அரிசியையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
* பின் அதில் 3 கப் நீரை ஊற்றி, பன்னீர் துண்டுகளைப் போட்டு, தேவையான உப்பு தூவி கிளறி, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும், குறைவான தீயில் 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, ஒரு முறை கிளறி விட்டால், சுவையான பன்னீர் பிரியாணி தயார்.
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக பன்னீர் பிரியாணி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பன்னீர் பிரியாணி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .