சைவம்

Paneer Chettinad Recipe In Tamil | பன்னீர் செட்டிநாடு

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பன்னீர் செட்டிநாடு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு பிரபலமான ஒரு செட்டிநாடு டிஷ் செய்யுங்கள். அது தான் பன்னீர் செட்டிநாடு. இந்த பன்னீர் செட்டிநாடு சப்பாத்திக்கு மட்டுமின்றி பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 300 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு…

* வரமிளகாய் – 5-6

* மல்லி – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* கிராம்பு – 3

* பட்டை – 1

* மிளகு – 1 டீஸ்பூன்

* கசகசா – 1 டீஸ்பூன்

* துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சிறிது ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, அதை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அதைத் தொடர்ந்து தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தேவையான அளவு நீரை ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து, 2 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பன்னீர் செட்டிநாடு தயார்.

Image Courtesy: naliniscooking

இந்த பதிவின் மூலமாக பன்னீர் செட்டிநாடு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பன்னீர் செட்டிநாடு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment