நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மொறுமொறுப்பான… இறால் வடை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
விடுமுறை நாட்களில் நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் வித்தியாசமான ரெசிபிக்களை முயற்சிக்க விரும்புபவரா? குறிப்பாக
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு…
* இறால் – 1/4 கிலோ
* துருவிய தேங்காய் – 1/4 கப்
* சின்ன வெங்காயம் – 6
* இஞ்சி – 1/2 இன்ச்
* பூண்டு – 5 பல்
* பச்சை மிளகாய் – 2
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
பிற பொருட்கள்:
* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* சோம்பு – 1 டீஸ்பூன்
* பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1/4 கப்
* அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
* கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
* முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
* பின் சுத்தம் செய்த இறாலை பிளெண்டரில் போட்டு, அத்துடன் தேங்காய் மற்றும் அரைப்பதற்கு கொடுத்துள்ள பிற பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் சோம்பு ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான இறால் வடை தயார்.
குறிப்பு:
* தேங்காய் எண்ணெயில் பொரித்தால், வடை இன்னும் சூப்பராக இருக்கும்.
* வடையை பொரிக்கும் போது, எண்ணெயில் சிறிது கறிவேப்பிலை மற்றும் சிவப்பு மிளகாயை சேர்த்துக் கொண்டால், நல்ல ஃப்ளேவர் கிடைக்கும்.
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக மொறுமொறுப்பான… இறால் வடை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மொறுமொறுப்பான… இறால் வடை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .